"ஊருக்கு மட்டும் தான் உபதேசமா?" : முன்னாள் மத்திய அமைச்சர் ராசா வருகையையொட்டி கோவையில் தி.மு.க.வினர் வைத்த கட்டவுட்

கோவை, டிசம்பர் 27

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா-வை வரவேற்பதற்காக கோவை சாலைகளில் கட்டவுட் வைக்கப்பட்டுள்ள விவகாரம் சமூக வலைதளங்களில் விவாதத்திற்குள்ளாகியுள்ளது.

கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா விமானம் மூலம் இன்று கோவை வந்தடைந்தார். அவர் சில நாட்களுக்கு முன் தான் 2 G வழக்கில் விடுதலை பெற்றார்.



அவரை வரவேற்பதற்காக தி.மு.க. தொண்டர்கள் காளப்பட்டியில் இருந்து கோவையில்பாளையம் செல்லும் சாலையில் வரவேற்பு பதாகைகளை அமைத்துள்ளனர். 

கோவையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின் போது அவினாசி சாலையில் அமைக்கப்பட்ட அலங்கார நுழைவு வாயிலில் மோதி ரகுபதி என்ற வாலிபர் உயிரிழந்த் சம்பவத்தில் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு கட்சியினரும் கண்டனங்களை தெரிவித்ததோடு, சாலைகளில் பேனர்கள் வைக்கக்கூடாது என்றும், பேனர்களை அமைக்க அதிகாரிகள் அனுமதி வழங்கக்கூடாது என்றும் வலியுறுத்தினர். 

இந்த நிலையில், திராவிட முன்னேற்ற கழகத்தினை சேர்ந்த ராசா-வை வரவேற்பதற்காக கோவையில் உள்ள சாலைகளில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. 

இதைத் தொடர்ந்து, "ஊருக்கு மட்டும் தான் உபதேசமா?" என்ற கேள்வி எழுந்துள்ளது. சமூக வலைதளங்களில் இந்த சம்பவம் விவாதத்திற்குள்ளாகியது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...